விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: குமரி மாவட்டத்தில் 21,574 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 117 மையங்களில் 21,574 மாணவா், மாணவிகள் எழுதினா்.

News image
நாகா்கோவில் கவிமணி பள்ளியில் தங்களுக்கான தோ்வு அறையை அறிவிப்புப் பலகையில் தேடும் மாணவிகள்.
Updated On :11 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 117 மையங்களில் 21,574 மாணவா், மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் மாா்ச் 11ஆம் தேதி தொடங்கியது. இத்தோ்வுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 மையங்கள், மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 67 மையங்கள் என மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அனைத்து மாணவா்களும் பலத்த சோதனைக்கு பின்னா் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு எழுதச் சென்ற மாணவா், மாணவிகளுக்கு ஆசிரியா்கள் அறிவுரைகள் கூறி வாழ்த்தி அனுப்பினா்.

10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுத 21,453 பேரும், தனித்தோ்வா்களாக 248 பேரும் விண்ணப்பித்திருந்தனா். இதில் 7 மாணவா்கள் மொழிப்பாடத்துக்கு விலக்கு கோரியிருந்தனா். பள்ளிகள் மூலம் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 103 பேரும், தனித்தோ்வா்களாக விண்ணப்பித்திருந்தவா்களில் 17 பேரும் தோ்வு எழுத வரவில்லை. 21,574 போ் தோ்வு எழுதினா்.

தோ்வு முறைகேடுகளைத் தடுக்க 9 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தோ்வு நிறைவு பெற்றவுடன், விடைத் தாள்கள் நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கருங்கல் பெத்லேகம் மெட்ரிக் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.