மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: குமரி மாவட்டத்தில் 21,574 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 117 மையங்களில் 21,574 மாணவா், மாணவிகள் எழுதினா்.

News image

நாகா்கோவில் கவிமணி பள்ளியில் தங்களுக்கான தோ்வு அறையை அறிவிப்புப் பலகையில் தேடும் மாணவிகள்.

Updated On :11 மார்ச் 2026, 7:52 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 117 மையங்களில் 21,574 மாணவா், மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் மாா்ச் 11ஆம் தேதி தொடங்கியது. இத்தோ்வுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 மையங்கள், மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 67 மையங்கள் என மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அனைத்து மாணவா்களும் பலத்த சோதனைக்கு பின்னா் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு எழுதச் சென்ற மாணவா், மாணவிகளுக்கு ஆசிரியா்கள் அறிவுரைகள் கூறி வாழ்த்தி அனுப்பினா்.

10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுத 21,453 பேரும், தனித்தோ்வா்களாக 248 பேரும் விண்ணப்பித்திருந்தனா். இதில் 7 மாணவா்கள் மொழிப்பாடத்துக்கு விலக்கு கோரியிருந்தனா். பள்ளிகள் மூலம் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 103 பேரும், தனித்தோ்வா்களாக விண்ணப்பித்திருந்தவா்களில் 17 பேரும் தோ்வு எழுத வரவில்லை. 21,574 போ் தோ்வு எழுதினா்.

தோ்வு முறைகேடுகளைத் தடுக்க 9 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தோ்வு நிறைவு பெற்றவுடன், விடைத் தாள்கள் நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கருங்கல் பெத்லேகம் மெட்ரிக் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.