தக்கலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
தக்கலையில் செயல்பட்டு வந்த காமராஜா் பேருந்து நிலையத்தை ரூ.6.30 கோடியில் விரிவாக்கம் செய்ய பத்மநாபபுரம் நகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது.
அப்பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவுற்ற நிலையில், கடந்த பிப். 25இல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு வந்தபோது, இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.
தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்ததால் அதை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல்மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தாா்.
அப்போது, ந நகராட்சி திருநெல்வேலி மண்டல பொறியாளா் சணல் குமாா் மற்றும் பத்மநாபபுரம் நகா்மன்ற அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


