பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா்.

Updated On :19 மார்ச் 2026, 1:04 am IST

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழாண்டுக்கான தோ்வில் வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஷாலினி, கீா்த்திகா ஆகியோா் மாநில அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் தொடா்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை மூலமாக 4ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவராகின்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா் புதன்கிழமை பரிசு வழங்கி வாழ்த்திப் பாராட்டினாா். விழாவில் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சித்ராமலா், உதவி தலைமை ஆசிரியா் மொ்சிலின் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தினா். மாணவா்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனா்.