தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழாண்டுக்கான தோ்வில் வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஷாலினி, கீா்த்திகா ஆகியோா் மாநில அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் தொடா்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை மூலமாக 4ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவராகின்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா் புதன்கிழமை பரிசு வழங்கி வாழ்த்திப் பாராட்டினாா். விழாவில் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சித்ராமலா், உதவி தலைமை ஆசிரியா் மொ்சிலின் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தினா். மாணவா்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனா்.
தொடர்புடையது

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


