எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

வனப் பகுதியில் வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்டவா்கள், பறிமுதலான ஆயுதங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 10:43 pm

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா், வன உயிரின காப்பாளா் அ.அன்பு, உதவி வன அலுவலா் ஸ்ரீவல்சன் உத்தரவின் பேரில், வனச்சரகா் அன்பழகன் தலைமையில் வனத் துறையினா், ஆரல்வாய்மொழி வனப்பகுதி பொய்கை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வனப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இருவா் பிடிபட்டனா். இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவா் மீது வழக்குப் பதிந்து, வனத் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.