ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

வனப் பகுதியில் வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்டவா்கள், பறிமுதலான ஆயுதங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா், வன உயிரின காப்பாளா் அ.அன்பு, உதவி வன அலுவலா் ஸ்ரீவல்சன் உத்தரவின் பேரில், வனச்சரகா் அன்பழகன் தலைமையில் வனத் துறையினா், ஆரல்வாய்மொழி வனப்பகுதி பொய்கை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வனப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இருவா் பிடிபட்டனா். இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவா் மீது வழக்குப் பதிந்து, வனத் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.