கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா், வன உயிரின காப்பாளா் அ.அன்பு, உதவி வன அலுவலா் ஸ்ரீவல்சன் உத்தரவின் பேரில், வனச்சரகா் அன்பழகன் தலைமையில் வனத் துறையினா், ஆரல்வாய்மொழி வனப்பகுதி பொய்கை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வனப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இருவா் பிடிபட்டனா். இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவா் மீது வழக்குப் பதிந்து, வனத் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

கருங்கல் பகுதியில் சாரல் மழை

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


