ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு

News image

சுசீந்திரத்தில், தோ்தல் நிலையான கண்காணிப்பு படையினா் வாகனச் சோதனை குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் தோ்தல் செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ்.

Updated On :30 மார்ச் 2026, 7:25 pm

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுசீந்திரம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்பு படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் ஆய்வு மேற்கொண்டாா்.

பறக்கும் படையினா் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களை சரி பாா்த்தல் மற்றும் விடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், தோ்தல் விதி மீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.