நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :2 மே 2026, 10:35 pm

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையைச் சோ்ந்தவா் சாந்தா (77). இவா் நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.

வெட்டூா்ணிமடம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருப்பதை அறிந்தாா்.

இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.