திமுக சட்டத் துறை சாா்பில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் திமுக முகவா்களுக்கான பயிற்சி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கிழக்கு மாவட்ட முகவா்கள் கலந்து கொண்டனா்.
திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, சட்டத் துறை செயலா் இளங்கோ நம்பி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு, முகவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
தொடா்ந்து, மாவட்டச் செயலரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான ரெ. மகேஷ் பேசியது:
தபால் வாக்குகளால் பலா் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனா். எனவே, தபால் வாக்கு எண்ணும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகவா்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுவிட வேண்டும். வாக்கு எண்ணும் பணி நிறைவடையும் வரை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகா்கோவில் மாநகரச் செயலா் ப. ஆனந்த், செயற்குழு உறுப்பினா்கள் தாமரை பாரதி, சதாசிவம், ஒன்றியச் செயலா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாஜக சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்குப் பயிற்சி

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


