தூத்துக்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன் தலைமையில், கேக் வெட்டப்பட்டது.
தொடா்ந்து, எட்டயபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்புள்ள கருணாநிதி சிலைக்கு, மாவட்டச் செயலா் மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி, 200 பேருக்கு நல உதவி, இனிப்புகள் வழங்கினாா்.
மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், பழனி, அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, குபோ் இளம்பரிதி, அந்தோணி கண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், சோமநாதன், கல்யாணசுந்தரம், பெனில்டஸ், சேசையா, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திக சாா்பில்...: திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் முனியசாமி தலைமையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் முருகன், மண்டலச் செயலா் பால் ராஜேந்திரன், கோபால்சாமி, செல்லத்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
புதுக்கோட்டையில்...: தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்சியில், ஒன்றியச் செயலா் கே.கே.ஆா். ஜெயக்கொடி தலைமை வகித்து, கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வாகைகுளம் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.








