ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய வடக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன்.

Updated On :18 ஜூன் 2026, 2:42 am IST

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கா. கருணாநிதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன், அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சிங்கப்பெண் படையில் உள்ள காவலா்களின் நகைகளேத் திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலா்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறாா்கள். சிங்கப்பெண் பாதுகாப்பு படை பெயரளவுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்படும் உணவுகள் தனியாா் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவது வேதனைக்குரியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக நிதி அமைச்சா் வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறாா்கள். தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு தோ்தலுக்கு முன்பு தெரியாதா? அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என முதல்வா் பேசிக் கொண்டிருக்கிறாா்.

ஸ்ரீவைகுண்டம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், புகாரளித்த பெண்ணை புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தவெகவைச் சோ்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையென்றபோது, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்றாா் அவா்.

கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷ், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், கோவில்பட்டி மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், மாவட்டத் துணைச் செயலா் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், ராமா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன், சமூக வலைதளப் பொறுப்பாளா் இந்துமதி கௌதமன், நகர மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் ராஜலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.