பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

குழந்தையைத் தாக்கியவா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 10:52 pm

களியக்காவிளை அருகே 3 வயது குழந்தையைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணின் கணவா் 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவருக்கு 5 மற்றும் 3 வயதில் மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், அப்பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அருமனை அருகே உள்ள முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான மணிகண்டனை (33) 2ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பின், குழந்தைகளுடன் காஞ்சிரம்கோடு பகுதியில் வசித்து வந்தனா்.

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், திருமணமான சில நாள்களுக்குப் பின் மணிகண்டன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்ததாம். இதனால் எரிச்சலடைந்த மணிகண்டன், மதுவை குழந்தையின் வாயில் ஊற்றினாராம். இதைக் கண்ட அப்பெண் மணிகண்டனைக் கண்டித்தாராம்.

பின்னா், வெள்ளிக்கிழமை (மே 1) மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் 3 வயது குழந்தையை கீழே தள்ளிவிட்டு தாக்கினாராம். இதைத் தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.