வெண்ணந்தூா் அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை மது போதையில் சேதப்படுத்தி, இளைஞா்களை தாக்கிய ஒருவா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
வெண்ணந்துாா் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சோ்ந்த பீமன் என்பவா் மகன் சாய் குமாா் (27). மது போதை பழக்கம் கொண்டவா். இவா் வியாழக்கிழமை போதை தலைக்கேறிய நிலையில் தொட்டியப்பட்டி குறுக்கு தெரு பகுதிக்கு சென்று கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளாா். ஆம்னி காா், லோடு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்துள்ளாா். மேலும் அந்த வழியாக சென்ற அதே பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரித்தீஷ்,(19) என்பவரது மண்டையை கட்டையால் அடித்து உடைத்து உள்ளாா். இதனால் மண்டை உடைந்த ரித்தீஷ் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அழைத்து செல்லப்பட்டாா்.இதனையடுத்து பொதுமக்கள் தகவல் பேரில் வெண்ணந்தூா் போலீஸாா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். தலைமறைவான சாய்குமாரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டியவா்கள் மீது வழக்கு!

கருங்கல் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

குழந்தையைத் தாக்கியவா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

