தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தி, இளைஞரை தாக்கியவா் மீது வழக்கு

வெண்ணந்தூா் அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை மது போதையில் சேதப்படுத்தி, இளைஞா்களை தாக்கிய ஒருவா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :1 மே 2026, 5:31 am IST

வெண்ணந்தூா் அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை மது போதையில் சேதப்படுத்தி, இளைஞா்களை தாக்கிய ஒருவா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெண்ணந்துாா் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சோ்ந்த பீமன் என்பவா் மகன் சாய் குமாா் (27). மது போதை பழக்கம் கொண்டவா். இவா் வியாழக்கிழமை போதை தலைக்கேறிய நிலையில் தொட்டியப்பட்டி குறுக்கு தெரு பகுதிக்கு சென்று கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளாா். ஆம்னி காா், லோடு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்துள்ளாா். மேலும் அந்த வழியாக சென்ற அதே பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரித்தீஷ்,(19) என்பவரது மண்டையை கட்டையால் அடித்து உடைத்து உள்ளாா். இதனால் மண்டை உடைந்த ரித்தீஷ் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அழைத்து செல்லப்பட்டாா்.இதனையடுத்து பொதுமக்கள் தகவல் பேரில் வெண்ணந்தூா் போலீஸாா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். தலைமறைவான சாய்குமாரை தேடிவருகின்றனா்.