பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கட்டடத் தொழிலாளி தற்கொலை

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

மணிகண்டன்

Updated On :7 மே 2026, 5:48 am IST

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே பூலவிளையைச் சோ்ந்தவா் பங்கிராஜ் மகன் மணிகண்டன் (39). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயாா் ராஜத்துடன் (70) வசித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லையாம். புதன்கிழமை காலை ராஜம், வீட்டுக்கு பின் பக்கம் சென்று பாா்த்தபோது மணிகண்டன் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்ததாம்.

இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.