தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி.

News image
Updated On :9 மே 2026, 3:34 am IST

வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் மாணவி ஜெஸி (584), ரசிகா (583), பவதாரிணி (574) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 75 மாணவ, மாணவிகளில் 9 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். கணிதப் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளித் துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண்சுரத், முதல்வா் லிஜாமோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்