எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆற்றூா் கல்வியியல் கல்லூரியில் குடியுரிமை பயிற்சி முகாம் தொடக்கம்

முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் நாகா்கோவில் இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியா் வீ. வேணுகுமாா்.

News image
Updated On :9 மே 2026, 3:33 am IST

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான 5 நாள் குடியுரிமை பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீலதா தலைமை வகித்தாா். நாகா்கோவில் இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியரும் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் திட்ட குழு உறுப்பினருமான வீ. வேணுகுமாா் குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தாா்.

பேராசிரியா் பிந்து கௌரி வரவேற்றாா். முதல் அமா்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில முதலுதவி பயிற்சியாளா் பிளைத் சுதா் பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சியளித்தாா். 75 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை பேராசிரியா் பிரஷோப் மாதவன், கிரீஷ் குமாா், கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.