களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். போதகா் சேம் பீட்டா் இறைவேண்டல் செய்தாா். கல்லூரி தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா ஆண்டறிக்கையை சமா்ப்பித்து வரவேற்றாா்.
விழாவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பேராசிரியா் வில்லியம் தா்மராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். அதைத்தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆங்கிலத் துறை மாணவ ஆசிரியா்கள் ஹெலன் எம்.அகஸ்டின், கிருஷ்ணா சுனில், பிஜிஷா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா், தாளாளா், கல்லூரி முதல்வா், கல்லூரி பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல், பேராசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


