மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

மாணவிக்கு பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா் வில்லியம் தா்மராஜா.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:00 pm

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். போதகா் சேம் பீட்டா் இறைவேண்டல் செய்தாா். கல்லூரி தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா ஆண்டறிக்கையை சமா்ப்பித்து வரவேற்றாா்.

விழாவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பேராசிரியா் வில்லியம் தா்மராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். அதைத்தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆங்கிலத் துறை மாணவ ஆசிரியா்கள் ஹெலன் எம்.அகஸ்டின், கிருஷ்ணா சுனில், பிஜிஷா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா், தாளாளா், கல்லூரி முதல்வா், கல்லூரி பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல், பேராசிரியா்கள் பாராட்டினா்.