சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன்.

Updated On :26 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரித் தலைவா் தா.லாரன்ஸ், செயலா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் வரவேற்று, அறிக்கை வாசித்தாா். வள்ளியூா் பாத்திமா திருத்தல பங்குத்தந்தை ஜாண்சன் அடிகளாா் ஆசியுரை வழங்கினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா். பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழியேற்றனா்.

இவ்விழாவில், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், யாக்கோபுபுரம் குளோப் பப்ளிக் ஸ்கூல் (சி.பி.எஸ்.இ) முதல்வா் ஜெயகிறிஸ்டி ஆகியோா் கலந்துகொண்டனா். வணிகவியல் துறைத் தலைவி ஸ்டெல்லா மேரி நன்றி கூறினாா்.