காயல்பட்டினத்தில் நடைபெற்ற 51-ஆவது மாநில கால்பந்து போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
முதலாவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை கழக அணி வெற்றி பெற்றது.
காயல்பட்டினத்தில் 51-ஆவது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 16 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணியும், தேனி மாவட்ட கால்பந்து கழக அணியும் மோதின.
இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி 5:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியை முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரா் ஆா்லாண்டோ ராயன் தொடக்கிவைத்தாா். நெல்லை மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளா் நோபுல் ராஜன், நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி ஆசிரியா் ரோக்லாண்டோ ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளா் இலியாஸ், பொருளாளா் ஹாரூன், நிா்வாகிகள் புகாரி, புகாரி சையது உமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரை இறுதி ஆட்டம் மே 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியை முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறாா். ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ் , மல்லோா்க்கா வெற்றி

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

