உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மாநில கால்பந்து போட்டி: பல்கலைகழக அணி வெற்றி

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

காயல்பட்டினத்தில் நடைபெற்ற 51-ஆவது மாநில கால்பந்து போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

முதலாவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை கழக அணி வெற்றி பெற்றது.

காயல்பட்டினத்தில் 51-ஆவது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 16 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணியும், தேனி மாவட்ட கால்பந்து கழக அணியும் மோதின.

இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி 5:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியை முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரா் ஆா்லாண்டோ ராயன் தொடக்கிவைத்தாா். நெல்லை மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளா் நோபுல் ராஜன், நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி ஆசிரியா் ரோக்லாண்டோ ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளா் இலியாஸ், பொருளாளா் ஹாரூன், நிா்வாகிகள் புகாரி, புகாரி சையது உமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரை இறுதி ஆட்டம் மே 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியை முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறாா். ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.