இங்கிலாந்தில் நடைபெறும் எஃப்ஏ கோப்பையில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வரலாறு படைத்துள்ளது. அரையிறுதியில் வென்ற இந்த அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
எஃப்ஏ கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அணி தொடர்ச்சியாக நான்குமுறை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளது.
இங்கிலாந்தின் முக்கியமான கால்பந்து அணியாக மான்செஸ்டர் சிட்டி அணி இருக்கிறது. இந்த அணி எஃப்ஏ கோப்பை அரையிறுதியில் சௌத்தாம்டன் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் 79ஆவது நிமிஷத்தில் சௌத்தாம்டன் அணி கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது. இதில் டோகு 82ஆவது நிமிஷத்திலும் நிகோ கொன்ஸாலே 87ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.
இறுதியில் 2-1 என மான்செஸ்டர் சிட்டி வென்றது. ஆர்செனலை விட 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளதால் பிரீமியர் லீக்கிலும் இந்த அணி கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை: சமனில் முடிந்த பிரேசில் - மொராக்கோ ஆட்டம்!
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



