தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டியின் அபார வெற்றி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டர் சிட்டி வீரர். - படம்: ஏபி

Updated On :1 மணி நேரம் முன்பு

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி கிறிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிராக 3-0 என அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியினால், பிரீமியர் லீக் கொப்பையை வெல்லும் ஆர்செனலின் கனவு தள்ளிப்போகியுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் யார் முன்னிலைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிரீமியர் லீக்கில் யார் கோப்பை வெல்லுவார்கள் என்ற போட்டி இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 38 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது 36 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி கிறிஸ்டல் பேலஸை 3-0 என வீழ்த்தி கோப்பைக்கான கனவை தக்கவைத்துள்ளது.

ஆர்செனல் அணி 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, மான்செஸ்டர் சிட்டி 77 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆர்செனல் அணி அடுத்த 2 போட்டிகளில் மே.19. 24ஆம் தேதிகளில் பர்ன்லி, கிறிஸ்டல் பேலஸ் அணிகளுடன் மோதவிருக்கிறது.

மான்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மவுத், ஆஸ்டன் வில்லா அணிகளுடன் மே.20, 24ஆம் தேதிகளில் விளையாடவிருக்கின்றன.

பிரீமியர் லீக்கில் பலமுறை இரண்டாமிடம் பிடித்த சாபம் ஆர்செனல் அணிக்கு இருக்கிறது. இந்த சீசனிலும் அது தொடருமா அல்லது முறியடிக்கப்படுமா சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Manchester City keeps pressure on Arsenal with 3-0 win against Crystal Palace

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.