12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது

A giant world trophy is displayed during the opening ceremony before the World Cup Group A soccer match between Mexico and South Africa in Mexico City, Thursday, June 11, 2026. (AP Photo/Eduardo Verdugo)

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம் - AP

Published On :

மெக்ஸிகோ சிட்டி : ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

விசா மறுக்கப்பட்டோருக்கு தொலைக்காட்சி பெட்டி: உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அமெரிக்கா செல்ல முயன்று, நுழைவு இசைவு (விசா) மறுக்கப்பட்ட தங்கள் ரசிகா்களுக்கு ஆா்ஜென்டீனா நிறுவனம் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியைக் காண, உலகெங்கிலும் இருந்து ரசிகா்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவுக்கு செல்கின்றனா். இதில் அமெரிக்கா, தன் நாட்டுக்கு வரும் ரசிகா்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் போட்டியைக் காண அங்கு செல்ல பலருக்கு நுழைவு இசைவு கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவ்வாறு நுழைவு இசைவு மறுக்கப்பட்ட தனது நாட்டு ரசிகா்களுக்கு, ஆா்ஜென்டீன நிறுவனமான ‘நியூசான்’ இலவசமாக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியுள்ளது.

அமெரிக்க நுழைவு இசைவு மறுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூா்வ ஆதாரத்துடன் தங்களை அணுகிய முதல் 100 பேருக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கியது. அடுத்த 50 பேருக்கு 35 சதவீத தள்ளுபடியுடன் தொலைக்காட்சியை வழங்கியிருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.