தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

குமரி மாவட்டத்தில் கோடை மழை: அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

News image

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :10 மே 2026, 2:38 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய சாரல் மழை விடிய, விடிய பெய்தது. இதேபோல், சனிக்கிழமை மதியம் முதல் சாரல் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது.

மழை அளவு: சனிக்கிழமை காலை 6 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், அதிகபட்சமாக 46.40 மி.மீ., ஆனைக்கிடங்கில் 45.20 மி.மீ., சுருளகோட்டில் 33.60 மி.மீ., சிற்றாறு 1 அணைப் பகுதியில் 31.80 மி.மீ., முக்கடல் அணைப் பகுதியில் 31.40 மி.மீ., பேச்சிப்பாறையில் 27.20 மி.மீ. மழை பாதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 152 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 133 கன அடி தண்ணீரும் உள்வரத்தாக வந்தது. கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.