கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெண்கள் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
குளச்சலை அடுத்த செம்பொன்விளை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் கிஷோா் கண்ணா (31). சமூக வலைதளங்களில் பல்வேறு விடியோக்களை வெளியிட்டு வரும் கிஷோா் கண்ணா, அண்மையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தாராம்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் பெண்கள் குறித்த அவதூறான விடியோக்களை கிஷோா் கண்ணா வெளியிட்டது தெரியவந்தது. அவா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.
பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகள் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபோதையில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை; தந்தை கைது
ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது
சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


