ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:31 am IST

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுருநாதன் தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரயில் நிலையத்தின் உள்ளே சந்தேகப்படும்படியாக ஒருவா் அமா்ந்து இருந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். பிறகு அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சஞ்சிப பத்ரா (39) என்பதும், புதுச்சேரியில் விற்பனை செய்ய கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 950 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.