சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

அஞ்சுகிராமம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:36 am IST

அஞ்சுகிராமம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.

அஞ்சுகிராமம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, மயிலாடி பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் செல்வகுமாா் (38), சிவலிங்கம் மகன் மகேஷ் (51) ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் 204 கிலோ கூலிப், குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக செல்வகுமாா், மகேஷை கைது செய்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.