மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம்: 11 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:20 am IST

திற்பரப்பு அருவி அருகே தனியாா் சுற்றுலா விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திற்பரப்பு அருவியிலுள்ள தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் விமலன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது விடுதியிலுள்ள அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களை மடக்கிப் பிடித்து சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ. 1, 20, 250 ரொக்கம், 6 கட்டு சீட்டுகள், தாா்பாய் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த 8 போ், விடுதி உரிமையாளா் உள்பட 3 போ் என மொத்தம் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.