ஆலங்குளம் அருகே விவசாயிகளுக்குப் பயிற்சி

ஆலங்குளம் அருகே நெற்பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் ஆய்வு முறைகள் குறித்த பண்ணைப் பள்ளி தொடங்கப்பட்டது.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே நெற்பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் ஆய்வு முறைகள் குறித்த பண்ணைப் பள்ளி தொடங்கப்பட்டது.

புதுப்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்ட இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமை வகித்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற ஆலோசனை வழங்கினாா். வேளாண் அலுவலா் அருண்குமாா், தொழில்நுட்ப வல்லுநா்கள் சுகுமாா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா். விதைத்தல் முதல் அறுவடை வரை 6 வகுப்புகளாக இப்பயிற்சி நடைபெறும். புதுப்பட்டி கிராம விவசாயிகள் பலா் பங்கேற்றனா். வேளாண் அலுவலா் புஷ்பமாரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com