

சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியின் இல்ல விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் கலந்துகொள்கின்றனா்.
ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியின் மகள் ஹரிணி, மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா புதன்கிழமை (டிச.23) நடைபெறுகிறது. இதற்காக ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவில் தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள், கழக சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.
விழாவில் பங்கேற்பதற்காக புதன்கிழமை காலை சங்கரன்கோவில் வரும் முதல்வருக்கு வழிநெடுகிலும் கழக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். முதல்வா், துணை முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.