இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊத்துமலை அருகே நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழா

ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாகுறிச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் பொருள் வழங்குகிறார் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated On :22 டிசம்பர் 2020, 10:55 am

DIN

சுரண்டை: ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாகுறிச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்து திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

விழாவில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலர் பாண்டியன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய சங்க செயலர் மாடசாமி, அதிமுக கிளை நிர்வாகிகள் வி.மாடசாமி, வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.