திப்பணம்பட்டியில் திமுக சாா்பில் டிச.30 ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கட்சியின் மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறாா். இதற்காக திப்பணம்பட்டி மைதானத்தில் அமைக்கப்படும் மேடையை கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டாா். அப்போது கட்சியின் கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் கபில், சமுத்திரபாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.