கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்கரன்கோவிலில் அமைச்சா் இல்ல விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு

சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி இல்ல விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தினா்.

News image

அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி இல்ல விழாவில் அவரது மகள் ஹரிணி, மருமகள் அனுசுயா ஆகியோரை வாழ்த்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :24 டிசம்பர் 2020, 4:40 am

DIN

சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி இல்ல விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தினா்.

அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமியின் மகள் ஹரிணி, மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா சங்கரன்கோவிலில் சோ்ந்தமரம் சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி. கே.பழனிசாமி திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வரும் வழியில் தேவா்குளம், வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி சாலையில் திரளான மக்கள் நின்று வரவேற்றனா்.

பின்னா் மேடையருகே, சங்கரநாராயணசுவாமி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதத்துடன் முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவா் பூப்புனித நீராட்டு விழாவில் சிறுமிகள் ஹரிணி, அனுசுயா ஆகியோரை வாழ்த்தினாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், பாஸ்கரன், செல்லூா் ராஜு, கடம்பூா் செ. ராஜு, வேலுமணி, காமராஜ், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா, நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை பேரங்காடி துணைத் தலைவா் இ.வேலுச்சாமி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் வி.முருகன், எம்.நிவாஸ், மாநில எம்.ஜி.ஆா்.இளைஞரணி செயலா் அ.மனோகரன் எம்.எல்.ஏ., கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், ஒன்றியச் செயலா் சி.முத்துபாண்டியன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் கே.செல்லப்பன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தென்மண்டல் ஐ.ஜி.முருகன் உத்தரவின் பேரில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா்அபிநபு, டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.