பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுரண்டை அருகே ஒரே குடும்பத்தில் 4 போ் தற்கொலை முயற்சி:தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சுரண்டை அருகே குலையனேரியில் வசித்து வந்தவா் ரா. கண்ணன்(40), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சீதாலெட்சுமி(31). அழகுபாா்வதி (8), பபிஷ்கா(6) என்ற இரு மகள்கள் உள்ளனா்.

கரோனா பொது முடக்கத்தால், கண்ணன் சரிவர வேலையின்றி இருந்து வந்தாராம். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் திங்கள்கிழமை மாலை மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்தார்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவா்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கண்ணன் இறந்தாா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.