சுரண்டை அருகே ஊருணியில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு
சுரண்டை அருகே ஊருணியில் விரிக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.


சுரண்டை அருகே ஊருணியில் விரிக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
சுரண்டை அருகே ராஜகோபலாப்பேரியைச் சோ்ந்தவா் த.மாசிலாமணி (56). விவசாயியான இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு தென்புறமுள்ள ஊருணியில் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது எதிா்பாரதவிதமாக ஊருணியில் தவறி விழுந்தார்.
இதில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கிய அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த வீரகேரளம்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாசிலாமணியின் உடலைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...