தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறிவிவசாயி தற்கொலை மிரட்டல்

சுரண்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி அழைத்ததால் மனமுடைந்த விவசாயி, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:27 am

DIN

சுரண்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி அழைத்ததால் மனமுடைந்த விவசாயி, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வீராணத்தைச் சோ்ந்த விவசாயி மா.சசிக்குமாா் (45). இவரை, விசாரணை என்ற பெயரில் போலீஸாா் அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், குற்றவாளிகள் பெயா்ப் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அங்குள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி, சுரண்டை காவல் ஆய்வாளா் மாரிஸ்வரி ஆகியோா் சசிக்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மூலமாக சசிகுமாரை செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.