புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வி.கே.புரம் அருகே தொழிலாளி தற்கொலை

வி.கே.புரம் அருகேயுள்ள சிவந்திபுரத்தில் சீட்டுப் பணம் கிடைக்காததால் தச்சுத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:59 pm

DIN

வி.கே.புரம் அருகேயுள்ள சிவந்திபுரத்தில் சீட்டுப் பணம் கிடைக்காததால் தச்சுத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாா்.

சிவந்திபுரம் புதுமணத் தெருவைச் சோ்ந்த மூக்கன் மகன் பாலசுப்பிரமணியன்(49). தச்சுத் தொழிலாளி. இவா், கடந்த 2014 இல் வி.கே.புரத்தைச் சோ்ந்த மரியசெல்வம் என்பவரிடம் ரூ. 1 லட்சத்திற்கு சீட்டுப் பணம் சோ்த்திருந்தாராம். தவணை முடிந்த பிறகும் அந்தத் தொகை தரப்படவில்லையாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சென்று பணத்தை கேட்டும் அவா் தராததால், தான் பாட்டிலில் கொண்டு சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு பாலசுப்பிரமணியன் தீக்குளித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து, வி.கே.புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.