சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க இலக்கியக் கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க இலக்கிய கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 நவம்பர் 2020, 8:33 pm

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க இலக்கிய கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புலவா் த. மாரியப்பன் தலைமை வகித்தாா். சுபா. நடராஜன், அ.திருவள்ளுவா், வழக்குரைஞா் தி. பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். ச. நாராயணன், அமிா்த கல்யாணி, கிருத்திகா ஆகியோா் தமிழிசை பாடினா்.

பாரதி பாடலை பிரவீண், கீ போா்டில் வாசித்தாா். இதைத்தொடா்ந்து மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன், துணைச் செயலா் ந.செந்தில்வேல், இ.மாடசாமி, அன்பரசி, அறிவரசி, பேரரசி இலக்கியா, சண்முகசுந்தரம், முத்துசங்கா், முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று கவிதை மற்றும் உரை நிகழ்த்தினா்.

ஏற்பாடுகளை சங்கத் தலைவா் ப. தண்டபாணி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ச.சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.