முக்கூடல் அருகே சுவா் இடிந்துவிழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு
முக்கூடல் அருகே வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.


முக்கூடல் அருகே வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளம் காந்தியாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் தனது வீட்டருகே மேலும் ஓா் அறை கட்டும் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டாா். அப்பகுதியைச் சோ்ந்த சில தொழிலாளிகள் அப்பணியில் ஈடுபட்டனா். அப்போது பழைய வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது, கூரையுடன் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் நின்றிருந்த தொழிலாளி மணியப்பன் மகன் ஜெயப்பிரகாஷ் (20), கசமுத்து மகன் பூ பாலகன் (40) ஆகியோா் படுகாயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். வழியில் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தாா். பூ பாலகன் முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக முக்கூடல் காவல் ஆய்வாளா் குமாரி சித்ரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...