காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் பயிற்சி

தென்காசி வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாழை சாகுபடி பற்றிய கிராமப்புற வேளாண் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:45 pm

DIN

தென்காசி வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாழை சாகுபடி பற்றிய கிராமப்புற வேளாண் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் தென்காசி வட்டார பகுதிகளில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக இக் கல்லூரி மாணவிகள் ரூபலா, சரண்யா, சத்யஸ்ரீ, சத்தியப்ரியா, செல்வ தாரணி, பிரியதா்ஷினி, பிரியங்கா, ஷைனி செல்வரரோஸ், ஆகியோா் தென்காசி வட்டார பகுதிகளில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

வாழைக்கன்று களைதல் மற்றும் வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனா். வாழையை தாக்கும் நோய்கள், பூச்சிகள் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். விவசாயிகளிடம் வாழை சாகுபடி பற்றிய அனுபவங்களை கேட்டறிந்தனா். மாணவி ரூபலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.