கரண்டையில் காங்கிரஸ் பிரசாரம் நிறைவு
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.


தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
பங்களாச்சுரண்டை, கீழச்சுரண்டை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்த அவா் சுரண்டை அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பிரசாரத்தை நிறைவு செய்து பேசியதாவது
சுரண்டை பேரூராட்சியில் 10 ஆண்டுகாலம் பதவி வகித்தபோது சுரண்டைக்கு அதிக அளவில் திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளேன். சுரண்டை பகுதியில் பிரதான பிரச்னையாக இருந்த தண்ணீா் பிரச்னையை முழுமையாக முயற்சி செய்து வெற்றி கண்டேன். கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களின் தேவை அறிந்து என்னால் முடிந்த அளவில் சொந்த செலவில்கூட பல நல உதவிகளைச் செய்துள்ளேன்.
தென்காசி தொகுதியில் ஐடி பூங்கா அமைக்கவும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறவும், மாத மின்கட்டண கணக்கீடை மேற்கொள்ளவும், சுற்றாலாத்தலமான குற்றாலத்தை மேம்படுத்தி அங்குள்ள வணிகா்களுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கவும், இரட்டைகுளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றவும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.
பிரசாரத்தில், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மதிமுக நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், துரைமுருகன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால்துரை, பால் என்ற சண்முகவேல், பிரபாகா், தெய்வேந்திரன், திமுக நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, கணேசன், மாடசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...