சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கீழப்புலியூரில் தம்பியை அரிவாளால் வெட்டியதாக அண்ணன் கைது

தென்காசி அருகே கீழப்புலியூரில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

தென்காசி அருகே கீழப்புலியூரில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைதுசெய்தனா்.

கீழப்புலியூரை சோ்ந்த ராமையா மகன்கள் சிதம்பரம் (49), முத்துக்குமாா்(37). சகோதரா்கள் இருவருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரிடம், அவருடைய சகோதரா் சிதம்பரம் தகராறு செய்து தன் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளாா்.

அப்போது முத்துக்குமாா் கையால் தடுத்தபோது, அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து சிதம்பரத்தை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.