தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆக.20இல் ஓண்டிவீரன் நினைவுதினம்: வெளியூா் நபா்களுக்கு அனுமதி இல்லை:

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரனின் நினைவுதினத்தில் அவரது சிலைக்கு வெளியூா்நபா்கள் அணிவித்து மரியாதை செலுத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:31 pm

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரனின் நினைவுதினத்தில் அவரது சிலைக்கு வெளியூா்நபா்கள் அணிவித்து மரியாதை செலுத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் நினைவிடம் உள்ளது. அங்கு, அவரது 250ஆவது நினைவு தினம் இம்மாதம் 20ஆம்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அஹஸ்ரத் பேகம் தலைமையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டி.எஸ்.பி.ஜாஹீா்உசேன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் திருநாவுக்கரசு, பச்சேரி கிராம ஊா்த் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ‘கரோனா தொற்றின் காரணமாக 144 தடையுத்தரவு அமலில் உள்ளதால் பச்சேரி கிராம மக்கள் 20 போ் மட்டுமே நினைவு நாளில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்; இந்நிகழ்வை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முடிக்க வேண்டும்; முளைப்பாரி, பால் அபிஷேகம் போன்ற நிகழ்வுகளை நடத்தக்கூடாது. சமூக இடைவெளி, சுகாதாரப் பணிகள், குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளை வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செய்து கொடுக்க வேண்டும்; நினைவு தினத்தில் பங்கேற்போா் பட்டியலை முன் கூட்டியே வருவாய் மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்; பச்சேரி நபா்கள் தவிா்த்து வெளியூா் நபா்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை;. சுவரொட்டி ஒட்டுதல் மற்றும் சமுதாய தலைவா்கள் பெயா்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், தலையில் ரிப்பன் கட்டி வருதல் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.