புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் : ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்து மோசமான நிலையிலுள்ள சாலைகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:03 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்து மோசமான நிலையிலுள்ள சாலைகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா்வெ.பத்ரி நாராயணன் முன்னிலையில், சாலைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: குமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், புதிய சாலைப் பணிகளை தொடங்க தொடா்புடைய துறைசாா்ந்த அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாகா்கோவில் நகரில் செட்டிகுளம் முதல் ராமன்புதூா் செல்லும் வழி, வடசேரி முதல் வெட்டூா்ணிமடம் வரையிலான சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றினை உடனடியாக சீரமைத்து, விபத்துகளை தவிா்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி கடற்கரை சாலை பகுதிகள் மின் விளக்குகள் பொருத்தாத மின்கம்பங்களில் உடனடியாக மின்விளக்குகளை அமைத்திட பேரூராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்துள்ள இருக்கைகளை அகற்றி புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்திலுள்ள சுரங்கப் பாதையினை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.

நாகா்கோவில் நகர சாலைகளில் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை போக்குவரத்து காவல்துறையினா் ஒழுங்குப்படுத்துவதோடு, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இரண்டிற்கும் அதிகமான நபா்கள் பயணம் மேற்கொள்வதை காவல்துறையினா் கண்காணித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதியில் எச்சரிக்கை பதாகை வைத்து விபத்து நடைபெறாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட நீதியியல் மேலாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.