சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலியில் உள்ள அல்வா கடைகளில் இனிப்பு வகைகளின் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான ஹோட்டல், டீக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான டீக்கடைகள் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும், ஹோட்டல்கள் விறகு அடுப்புகளுக்கும் மாறியுள்ளன. குறைந்த வகை உணவுப் பட்டியலுடன் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகளில் அல்வா, பால்கோவா தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பு மூலம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Summary
Cylinder shortage! Halwa production affected in Tirunelveli!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவினா் கொண்டாட்டம்
தக்காளி அல்வா
ஹா...ஹா...

சிலிண்டர் தட்டுப்பாடு! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி இல்லை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




