ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிலிண்டர் தட்டுப்பாடு! நெல்லையில் அல்வா தயாரிப்பு பாதிப்பு!

நெல்லையில் அல்வா தயாரிப்பில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 6:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலியில் உள்ள அல்வா கடைகளில் இனிப்பு வகைகளின் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான ஹோட்டல், டீக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான டீக்கடைகள் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும், ஹோட்டல்கள் விறகு அடுப்புகளுக்கும் மாறியுள்ளன. குறைந்த வகை உணவுப் பட்டியலுடன் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகளில் அல்வா, பால்கோவா தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பு மூலம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.