திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிலிண்டர் தட்டுப்பாடு! நெல்லையில் அல்வா தயாரிப்பு பாதிப்பு!

நெல்லையில் அல்வா தயாரிப்பில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 11:49 am IST

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலியில் உள்ள அல்வா கடைகளில் இனிப்பு வகைகளின் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான ஹோட்டல், டீக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான டீக்கடைகள் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும், ஹோட்டல்கள் விறகு அடுப்புகளுக்கும் மாறியுள்ளன. குறைந்த வகை உணவுப் பட்டியலுடன் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகளில் அல்வா, பால்கோவா தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பு மூலம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

Cylinder shortage! Halwa production affected in Tirunelveli!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.