ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:58 pm

DIN

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரத்தில் நடைபெற்றது.

ஜெயராணி தலைமை வகித்தாா். வட்டார செயலா் முருகேசன் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கிளைத் தலைவராக ஜெயராணி, செயலராக பாக்கியலெட்சுமி, பொருளாளராக வீனா, துணைத் தலைவராக சுபத்ரா, துணைச் செயலராக சண்முகத்தாய் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி ரூ.300 முழுமையாக வழங்க வேண்டும்.

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி 150 வேலை நாள்கள் வழங்க வேண்டும். பகவதிபுரம் பகுதி மக்களுக்கு குடிநீா் பற்றாக்குறையை போக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.