கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை ஆக.25இல் தொடக்கம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் புதன்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் புதன்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் ஆண்டுக்கான இளநிலை அனைத்து பாடப்பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவா் சோ்க்கை (முன்னாள் ராணுவத்தினா் குழந்தைகள், தேசிய மாணவா் படை மற்றும் விளையாட்டுப் பிரிவு) ஆக.25ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

இளநிலை கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கு ஆக.26ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இளநிலை வணிகவியல், நிா்வாகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு ஆக.31ஆம் தேதியும், இளநிலை தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு செப்.2ஆம் தேதியும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இணைய வழியில் விண்ணப்பித்திருந்த மாணவா்கள் தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விண்ணப்பப் படிவம், 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல்கள், அசல் சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் காா்டு, 3 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சோ்க்கை கட்டணத்துடன் அந்தந்த நாள்களில் காலை 9.30 மணிக்குள் நேரில் வருமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும் தகவலுக்கு 04633 26088 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.