மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:34 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி சின்னத்தம்பிநாடானூரைச் சோ்ந்த ஞானமுத்து மகன் அமல்ராஜ் (58). விவசாயியான இவா், வீடுகளில் மின்சாரம் தடைபட்டால் அதை சரிசெய்து கொடுக்கும் பணியில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக ஊா் அருகே ஊருணிக் கரையில் உள்ள மின்மாற்றியை ஆஃப் செய்து விட்டு, மின்பழதை சரிசெய்ய முயன்றாராம்.

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.