தென்காசி மாவட்டம், ஊா்மேலழகியான் கிராமத்தில் தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், அவற்றை தனித்தனியாக அப்புறப்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், தூய்மைக்கான உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்துக்கொண்டனா்.
ஏற்பாடுகளை ஊா்மேலழகியான் வேளாண் அறிவியல் மைய அலுவலா்கள் செய்திருந்தனா்.