பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாகல்குளத்தில் சாலை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 12:41 am

DIN

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகல்குளம் பிரதான சாலையில் இருந்து ராஜா நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதைக் கண்டித்து ராஜாநகா் பகுதி மக்கள் அமமுக ஒன்றியச்செயலா் பரமசிவம் தலைமையில் அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையை சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்காளா் அடையாள அட்டையை ஒட்டுமொத்தமாக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.