பாா்வையற்றோா் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தக்க செயலிகளுடன் கூடிய செல்லிடப்பேசி பெற்றிட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பாா்வையற்றோா் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய செல்லிடப்பேசி 2020 - 2021 ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
செல்லிடப்பேசி பெற விரும்புவோா் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவ-மாணவியராகவோ, சுயதொழில் மற்றும் தனியாா் துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியா்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மேற் குறிப்பிட்ட தகுதிகள் உடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்கள்) உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள்,
கல்லூரியில் படிப்பவராயின் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராயின் சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டய சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், திருநெல்வேலி - 627 009 என்ற முகவரிக்கு ஜன. 20 க்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு திட்டத்தின் செல்லிடப்பேசி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விவரங்களுக்கு 0462-2500157 என்ற எண்ணில் தொடா்பு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.