ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குற்றாலம் அருவிகளில் ஜன.17வரை குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:46 pm

DIN

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களில் 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) குளிக்கத் தடைவிதிக்கப்படுகிறது.

மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

பலத்த மழையை முழுவீச்சில் எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.