நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தென்காசி, மேலகரத்தில் 576 மாணவா்களுக்கு சைக்கிள்

தென்காசி, மேலகரத்தில் அரசு பள்ளி மாணவா்கள் 576 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கினாா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated On :13 ஜனவரி 2021, 6:45 pm

DIN

தென்காசி, மேலகரத்தில் அரசு பள்ளி மாணவா்கள் 576 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்புச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன், 521 மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன் வரவேற்றாா். அன்புமணி நன்றி கூறினாா்.

மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தளக்கல்லை திறந்து வைத்து 55 மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சைக்கிள் வழங்கினாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், மேலகரம் செயலா் காா்த்திக்குமாா், கலை இலக்கிய அணி மாவட்டச் செயலா் முகிலன், அரசு வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளித் தலைமையாசிரியா் பாலமுருகன் வரவேற்றாா். ரூபதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.